எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நியாய விலைக் கடைகளை உரிய நேரத்தில் திறக்க தமிழக அரசு உத்தரவு

நியாய விலைக் கடைகளை உரிய நேரத்தில் திறந்து செயல்படுத்த வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.

News image
கோப்புப் படம்.
Updated On :1 மார்ச் 2022, 8:49 pm

DIN

நியாய விலைக் கடைகளை உரிய நேரத்தில் திறந்து செயல்படுத்த வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.

இதுகுறித்த உத்தரவு: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நியாயவிலைக் கடைகள் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையும், இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் இந்த நேரம் பின்பற்றப்படுவதில்லை. எனவே, மாதாந்திர நியாய விலைக் கடை பணியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்துத் தெரிவித்து, குறித்த நேரத்தில் கடைகளைத் திறந்து செயல்படுத்த உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு தகவல் பலகையில் காட்சிப் படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.