இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உக்ரைனிலிருந்து திரும்பியவர்களின் படிப்பு விவகாரம்: மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:36 am

DIN

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அந்நாட்டிற்கு படிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதியிலேயே இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு இன்று எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

“உக்ரைனிலிருந்து இதுவரை தமிழகத்தை சேர்ந்த 1,200 மருத்துவ மாணவர்கள் திரும்பியுள்ளனர். வரும் நாள்களில் மேலும் சில மாணவர்கள் திரும்பவுள்ளனர். தற்போதைய சூழல் அவர்களின் படிப்பை சீர்குலைத்ததுடன் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் மீண்டும் உக்ரைனில் படிப்பை தொடர்வது சாத்தியமற்றது. ஆகையால், நாடு திரும்பும் மாணவர்களின் படிப்பை இந்தியாவிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் படிப்பு விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.