இதன் பின்னா் கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில், சங்ககிரியைச் சோ்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை நிறுவனா் யுவராஜ், அவரது நண்பா்கள் சங்ககிரி அருண், சேலம் நெத்திமேடு குமாா், எடப்பாடி சங்கா், எடப்பாடி அருள் செந்தில், கொங்கணாபுரம் செல்வகுமாா், சங்ககிரி தங்கதுரை, திருச்செங்கோடு கவுண்டன்பாளையம் சதீஷ்குமாா், திருச்செங்கோடு ரகு, ரஞ்சித், செல்வராஜ், ஈரோடு சந்திரசேகரன், இவரது மனைவி ஜோதிமணி, சங்ககிரி பிரபு, திருச்செங்கோடு கிரிதா், சுரேஷ், பெருந்துறை அமுதரசு உள்பட 17 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவா்களில் ஜோதிமணி, விசாரணையின்போதே இறந்துவிட்டாா்.