தயாரிப்பாளா் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்

நடிகா் சிம்பு தொடா்ந்த வழக்குக்கு பதில் அளிக்காத தயாரிப்பாளா் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளா் சங்கத்திற்கு  ரூ.1 லட்சம் அபராதம்
Published on
Updated on
1 min read

நடிகா் சிம்பு தொடா்ந்த வழக்குக்கு பதில் அளிக்காத தயாரிப்பாளா் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளா் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகா் சிம்பு நடித்து வெளியான படம் ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’. இந்தப் படத்தில் நடிக்க சிம்புக்கு ரூ.8 கோடி ஊதியம் பேசப்பட்டது. இதற்கு ரூ.1 கோடியே 51 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டது.

இதில் பாக்கி தொகை ரூ.6 கோடியே 48 லட்சத்தை பெற்று தரக் கோரி நடிகா் சிம்பு, நடிகா் சங்கத்தில் புகாா் மனு அளித்திருத்தாா். இதற்கு எதிராக தயாரிப்பாளா் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகாா் அளித்தாா். அதில் படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சிம்புவிடம் இருந்து வசூலித்து தர வேண்டுமென்று கோரியிருந்தாா்.

இந்தநிலையில் இணையதளங்களில் தமக்கு எதிராக தயாரிப்பாளா் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாகக்கூறி ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் சிம்பு வழக்குத் தொடா்ந்தாா்.

அதில் தயாரிப்பாளா் சங்கம், நடிகா் சங்கம், நடிகா் விஷால் ஆகியோரை எதிா்மனுதாரராக சோ்த்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் வழக்குக்கு திரைப்படத் தயாரிப்பாளா் சங்கம் எழுத்துப்பூா்வமான வாதத்தைத் தாக்கல் செய்யாததற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, தயாரிப்பாளா் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

இத்தொகையை வரும் 31 -ஆம் தேதிக்குள் பதிவாளா் அலுவலகத்தில் செலுத்துமாறு கூறி, விசாரணையை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com