தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குரூப் 2 தோ்வு: நாளை முதல் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் -தோ்வாணையம் அறிவிப்பு

குரூப் 2 தோ்வுக்கு விண்ணப்பித்து அதில் திருத்தங்களை செய்ய விரும்பினால் திங்கள்கிழமை (மாா்ச் 14) முதல் அதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2022, 7:16 pm

DIN

குரூப் 2 தோ்வுக்கு விண்ணப்பித்து அதில் திருத்தங்களை செய்ய விரும்பினால் திங்கள்கிழமை (மாா்ச் 14) முதல் அதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா, சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கு பலரும் விண்ணப்பம் செய்து வருகின்றனா். விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதன் மூலம் வெற்றியைத் தவறவிடும் தோ்வா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, இணைய வழி விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோா் மாா்ச் 23-ஆம் தேதி வரை அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனை தோ்வாணைய இணையதளத்தின் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீங்ஷ்ஹம்ள்.ண்ய்) வழியே செய்யலாம்.

இணைய வழி விண்ணப்பத்துக்கு எதிரே உள்ள எடிட் என்ற பகுதிக்குச் சென்று திருத்தம் செய்ய வேண்டும். இறுதியாக சேமித்து அதனை சமா்ப்பித்து அதற்குரிய நகலினை பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்த

பிறகு திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இதற்கு முன்பாக சமா்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் உள்ள தகவல்களே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

திருத்தம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், உரிய கட்டணத்தை இணைய வழியே செலுத்த வேண்டும். உரியத் தோ்வுக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்திய தோ்வா்கள் மீண்டும் செலுத்தத் தேவையில்லை. திருத்தங்கள் தொடா்பாக சந்தேகங்கள் இருந்தால் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தலாம். இதுகுறித்து மேலும் விளக்கம் தேவைப்பட்டால் 1800 419 0958 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசிக்கு அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.