தமிழகத்தில் இன்று 24-வது மெகா தடுப்பூசி முகாம்: 50,000 இடங்களில் நடைபெறுகிறது

தமிழகம் முழுவதும் இன்று 24 ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் இன்று 24 ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு சனிக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 24 ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும் 70.4 % பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தகுதியான 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com