ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூரை வீடு தீக்கிரை: மனநலம் பாதித்த இளைஞர் கருகி சாவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கூரை வீடு இன்று  மாலை தீக்கிரையான நிலையில், வீட்டுக்குள் கட்டப்பட்டு இருந்த மன நலம் பாதித்த இளைஞர் ஒருவர் உடல் கருகி  உயிரிழந்தார்.

News image
தீக்கிரையான குடிசை
Updated On :16 மார்ச் 2022, 2:12 pm

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கூரை வீடு இன்று  மாலை தீக்கிரையான நிலையில், வீட்டுக்குள் கட்டப்பட்டு இருந்த மன நலம் பாதித்த இளைஞர் ஒருவர் உடல் கருகி  உயிரிழந்தார்.

தாணிக்கோட்டகம், ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்தவர் லெட்சுமணன் விவசாயத் தொழிலாளி. இவரது முதல் மனைவிக்கு பிறந்தவர் சங்கர்(32) மன நலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார்.

முதல் மனைவி ஏற்கனவே காலமாகிவிட்டதால் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்ட மனைவி ரஜினாவுடன் வசித்து வந்த லெட்சுமணன், கடந்த ஆண்டில் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

பெற்றோர் இருவரும் காலமாகிவிட்ட நிலையில்,சித்தி ரஜினாவின் பராமரிப்பில் இருந்து வந்த சங்கர் வெளியிடங்களுக்கு ஓடிவிடாமல் தடுக்கும் வகையில் கூரைவீட்டினுல் சங்கிலியால் கட்டப்படுவாராம். அந்த வகையில், உணவு கொடுக்கப்பட்ட பின்னர் வீட்டினுள் சங்கரை கட்டிப்போட்டுவிட்டு ரஜினா நூறுநாள் வேலைக்கு சென்றுவிட்டார்.

மாலையில் கூரையில் ஏற்பட்ட தீ பரவியது. தீயில் கருகிய சங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வாய்மேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.