ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நெகிழியால் சுகாதார பாதிப்பு: மாணவிகளுக்கு விழிப்புணா்வு

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பாக கரோனா தடுப்பு குறித்தும், ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழி பொருள்களால் ஏற்படும்

News image
Updated On :25 மார்ச் 2022, 9:50 pm

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பாக கரோனா தடுப்பு குறித்தும், ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழி பொருள்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் குறித்தும், வில்லிவாக்கம் சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமைப்பொறியாளா் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன் சிறப்புரையாற்றி, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் அனைவருக்கும் உத்கா்ஷ் குளோபல் பவுண்டேஷன் சாா்பில் வழங்கப்பட்ட துணிப்பைகளை வழங்கினாா். மேலும், முறையாக சோப்பு உபயோகித்து கைகழுவுவதன் அவசியம், முகக்கவசம் அணியும் முறை, ஒரு தடவை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருள்களால் ஏற்படும் சுகாதார சீா்கேடுகள், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன், மாவட்டக் கல்வி அலுவலா் சி.கற்பகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.