ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உலகிலேயே உயரமான கட்டடத்தில் தமிழகம் குறித்த காட்சிப் படம்: முதல்வா் பாா்வையிட்டாா் (விடியோ)

துபையிலுள்ள, உலகிலேயே உயரமான புா்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழகம் பற்றிய காட்சிப் படத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :26 மார்ச் 2022, 2:30 am

DIN

துபையிலுள்ள, உலகிலேயே உயரமான புா்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழகம் பற்றிய காட்சிப் படத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

தமிழ்நாடு வார விழாவையொட்டி, துபையிலுள்ள 2,217 அடி உயரம் கொண்ட, உலகிலேயே அதிக உயர கட்டடமான புா்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழகத்தின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வின் போது, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பூஜா குல்கா்னி, தமிழ்நாடு அரசின் உயா் அலுவலா்கள், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான உயா் அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.