இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

News image

கம்பம் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னதானம்.

Updated On :8 மே 2022, 7:25 am

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இதில், ஆண்,பெண் பக்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 19 தொடங்கி,  21 நாள்கள் நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மனுக்கு மண்டகப்படி அமைத்து அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

சித்திரைத் திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

அன்னதான விழாவில் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அன்னதான ஏற்பாடுகளை கே.ஆர் ஜெயபாண்டியன், கலைமணி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.