பேருந்து நிலையம் அமைக்க நூறாண்டு புளிய மரங்களை வெட்ட தடை

மல்லூரில் பேருந்து நிலையம் அமைக்க 100 ஆண்டு பழமையான 7 புளிய மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மல்லூரில் பேருந்து நிலையம் அமைக்க 100 ஆண்டு பழமையான 7 புளிய மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக சேலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ரஞ்சித் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேருந்து நிலையம் அமைக்க 100 ஆண்டு பழமையான 7 புளிய மரங்களை வெட்ட அனுமதி வழங்க கூடாது என சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் இதுதொடர்பாக ஆட்சியர், கோட்டாட்சியர், மல்லூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோர் பதில் அளிக்கவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com