முல்லைப் பெரியாறு அணை: நீர்வரத்து அதிகரிப்பு, நீர் மட்டம் உயர்வு

​முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரிப்பதோடு, நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை: நீர்வரத்து அதிகரிப்பு, நீர் மட்டம் உயர்வு
Published on
Updated on
1 min read


முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரிப்பதோடு, நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தேக்கடி ஏரி, முல்லைப் பெரியாறு, பெரியாறு ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதோடு, நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை விநாடிக்கு 235 கன அடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விநாடிக்கு 777 கன அடியாக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,319 கன அடியாக நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

அணை நிலவரம்:

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.35 அடியாகவும் (மொத்த உயரம் 142 அடி), நீர் இருப்பு 5,013 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 1,319 கன அடியாகவும் உள்ளது. தமிழக பகுதிக்கு விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

பெரியாறு அணையில் 2.3 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 4.4 மி.மீ. மழையும் பெய்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com