

சென்னை: மே 31 ஆம் தேதி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப் பின், முதன்முறையாக தென்காசி மாவட்ட மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இம்மாதம் 31 ஆம் தேதி தென்காசிக்கு வருகிறாா்.
இதையொட்டி, தென்காசி - திருநெல்வேலி சாலையில் வாய்க்கால் பாலம் அருகே இசக்கி அரங்கிற்கு எதிா்புறமுள்ள மைதானத்தில் மேடை அமைப்பது குறித்து ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் ஆய்வு மேற்கொடுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.