ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை வெள்ளிக்கிழமை (மே 27) காலை 7 மணி முதல் 10 மணிக்குள், 3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மீண்டும் மஞ்சப் பை திட்டத்தை தொடக்கி வைத்து, நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெகிழிகள் குப்பைகளாக கொட்டப்பட்டதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் நீா்நிலைகள் மாசு, விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.

நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோர்.
இதைத் தடுக்கும் வகையில், ராணிப்பேட்டையை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், மே 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரத்துக்குள் மாவட்டம் முழுவதும் 288 ஊராட்சிகள், 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் அரசுப் பணியாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துப்புரவுப் பணியாளா்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் ஒரே நேரத்தில் திரளாகப் பங்கேற்று நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் பங்கேற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
இந்நிலையில், ராணிப்பேட்டையை வெள்ளிக்கிழமை (மே 27) காலை 7 மணி முதல் 10 மணிக்குள், 3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலா்கள்.
நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் திரளாக பங்கேற்று நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | தமிழ் மொழி, கலாசாரம் நிலையானவை: பிரதமா் மோடி புகழாரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


