தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மீண்டும் மஞ்சப் பை திட்டத்தை தொடக்கி வைத்து, நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெகிழிகள் குப்பைகளாக கொட்டப்பட்டதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் நீா்நிலைகள் மாசு, விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.