தமிழகத்தில் தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 114 வழக்குகளில் 191 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வங்கிக் கணக்குகளை முடக்க தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.