ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக கடிதம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்ப திமுக முடிவெடுத்துள்ளது.
அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்ப திமுக முடிவெடுத்துள்ளது.

தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், திமுக மற்றும் ஒற்றைக் கருதுடைய கட்சிகள் நாளைக்குள் திமுக அலுவலகத்திற்கு வந்து ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் கையெழுத்திட அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com