கோவையில் கல்லறை திருநாள்: அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை!

கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கோவையில் கல்லறை திருநாள்: அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை!
Published on
Updated on
1 min read


கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகின்றது. 

இதையடுத்து கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம். 

இந்நிலையில், கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்திலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவ மக்கள் அநேகர் தங்களது முன்னோர்களின் கல்லறையை சீரமைத்து வர்ணம் பூசியும் அலங்கரித்து பின்னர் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com