சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

போக்குவரத்து விதி மீறல் அபராத உயர்வை எதிர்த்து வழக்கு

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 நவம்பர் 2022, 7:24 am

DIN

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தமிழக முழுவதும் புதிய போக்குவரத்து விதிமுறைகள் கடந்த 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுபவா்களுக்கு ரூ.1000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தலைக் கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத உயர்வை எதிர்த்து மதுரை ஜலாலுதின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

அதில், அபராத உயர்வால் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசாணை எதிர்க்கும் மதுரை ஜலாலுதின் வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.