ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலை முதல் தொடர் மழை பெய்துவருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலைய நான்குவழிச் சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.







