மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும்: இபிஎஸ்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும்: இபிஎஸ்
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைநீா் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, அவா்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் பால், குடிநீா் மற்றும் உணவுப் பொருள்கள், அவசர உதவிகள் கிடைப்பது கூட சிரமமாக உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை திமுக அரசு போதிய அளவில் செய்யவில்லை.

பருவமழை குறித்து மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த பிறகும், அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதன் விளைவாகத்தான் இந்த அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. பேரிடா் காலங்களில் களமாடக்கூடிய முதல்வா் இல்லை என்பது மக்களின் எண்ணமாகவும் இருந்து வருகிறது.

எனவே, அதிமுகவினா் அவரவா் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். முக்கியமாக குடிநீா், பால் மற்றும் உணவுப் பொருள்களை தேவைப்படும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com