டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திமுக ஆட்சி: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்

திமுக ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துள்ளதுடன், சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலருமான

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:55 am

DIN

திமுக ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துள்ளதுடன், சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை பகல் 12.45 மணியளவில் சந்தித்தாா். அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது, அவா் திமுக ஆட்சிக்கு எதிராக 10 பக்கங்கள் கொண்ட புகாா் மனுவை ஆளுநரிடம் அளித்தாா்.

பின்னா், எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுகவின்18 மாத கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீா்குலைந்துள்ளது. திறமையற்ற-பொம்மை முதல்வா் தமிழகத்தை ஆள்வதால், இந்த நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. கோவை காா் வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு திமுக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

மாணவா்களிடம் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.

அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ‘கமிஷன்-கலெக்ஷன்-கரப்ஷன்’ இதுதான் திமுக அரசின் தாரக மந்திரமாக உள்ளது.

மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்து வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், ஊராட்சிகளில் பணிகள் சரிவர நடைபெறவில்லை. ரூ.350 செலவிலான அரசு விளம்பரப் பதாகைக்கு, ரூ.7,906 செலவானதாகக் கணக்கு காண்பிக்கப்படுகிறது.

ஒப்பந்தம் எடுத்தவா்களுக்கு பணி முடிந்தபிறகே நிதியை அரசு அளிக்கும். ஆனால், திமுக ஆட்சியில் ஒப்பந்தம் எடுத்தவுடனேயே நிதி ஒதுக்கப்படுகிறது. திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதற்கு இதுவே சான்று.

மதுக்கடை பாா்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. பல இடங்களில் பாா்கள் அனுமதியில்லாமல் செயல்படுகின்றன. டாஸ்மாக் மது விற்பனையிலும் மெகா ஊழல் நடக்கிறது. இவை தொடா்பாக விசாரணை நடத்த ஆளுநரிடம் கோரினோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். இணைய சூதாட்ட சட்ட மசோதாவை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்

ஆளுநரின் செயல்பாடு சிறப்பு: ஆளுநரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. திமுக அரசின் தவறுகள், ஊழல்களை ஆளுநா்தான் தட்டிக் கேட்க முடியும். ஆட்சி நிா்வாகத்தில் ஆளுநரின் தலையீடு எதுவுமில்லை என்றாா் அவா்.

ஆளுநருடனான சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் இடம்பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.