வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி ரத்ன அங்கியில் சேவை!

அத்திவரதர் புகழ் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் தாதாச்சாரியாரின் சாற்றுமுறை உற்வசவத்தையொட்டி வியாழக்கிழமை உற்சவர் தேவராஜசுவாமி ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

News image

ஆழ்வார் சுற்றுப்பிராகாரத்தில் ரத்ன அங்கி அணிந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் பவனி வந்த உற்சவர் தேவராஜசுவாமி மற்றும் பெருந்தேவித்தாயார்

Updated On :24 நவம்பர் 2022, 9:20 am

அத்திவரதர் புகழ் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலில் தாதாச்சாரியாரின் சாற்றுமுறை உற்வசவத்தையொட்டி வியாழக்கிழமை உற்சவர் தேவராஜசுவாமி ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ராஜகுரு தாத தேசிகன் சாற்று முறை உற்வசம் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருநாள் உள்ளிட்ட இரு நாள்கள் மட்டும் ரத்ன அங்கியில் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

வியாழக்கிழமை தாததேசிகன் உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமியும்,பெருந்தேவித் தாயாரும் ரத்ன அங்கி அணிந்து திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் மங்கள இசை வாத்தியங்களுடன் பவனி வந்து தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளினர்.

பெருமாளை ரத்ன அங்கியில் தரிசிப்பதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேசிகன் சன்னதியில் தரிசனதாம்பூலம் மரியாதை செய்விக்கப்பட்டுச் சிறப்புத் தீபாராதனைகளும் நடந்தன. பின்னர் உற்சவர் தேவராஜ சுவாமிக்கும், பெருந்தேவித் தாயாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.

மாலையில் உற்சவர் தேவராஜசுவாமி கோயில் சன்னதி தெருவில் உள்ள திருவடி கோயில் வரை விதீயுலா வந்தார். பின்னர் ஆலயத்தின் நுழைவுவாயிலுக்கு வந்து பெருந்தேவித்தாயாருடன் இணைந்து கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி சிறப்புத் தீபாராதனைகளும் நடந்தன. நிறைவாக பெருமாளும், தாயாரும் அவரவர் சன்னதிகளுக்கு எழுந்தருளினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.