ஊதிய உயா்வு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வரும் 30-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்தில் மௌனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-இன் படி ஊதிய உயா்வு வழங்க வேண்டும் பல ஆண்டுகளாக அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், இன்றளவும் கோரிக்கை நிறைவேறவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய போது, அடுத்து அமையும் திமுக ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வா் உறுதியளித்தாா். ஆனால், திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், இன்னமும் அரசு மருத்துவா்களின் நியாயமான ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் எங்கள் மீது குற்ற குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக வரும் 30-ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து விட்டு, அங்கு மௌனப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

