ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆன்லைன் ரம்மி: ஆளுநரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி!

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை(வியாழக்கிழமை) ஆளுநரை சந்திக்கவிருக்கிறார். 

News image
அமைச்சர் ரகுபதி
Updated On :30 நவம்பர் 2022, 11:54 am

DIN

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை(வியாழக்கிழமை) ஆளுநரை சந்திக்கவிருக்கிறார். 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்ட மசோதா காலாவதியாகி விடும். எனினும், ஆளுநர் காலம் தாழ்த்தியதால்  மசோதா காலாவதியாகிவிட்டது. 

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அதுகுறித்து விளக்கமளிக்க சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை(வியாழக்கிழமை) ஆளுநரை சந்திக்கவிருக்கிறார். 

நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க அமைச்சருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.