தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
Updated on
1 min read

ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக தனுஷ்கோடி விளங்கி வருகிறது. இன்று காலை முதல் தனுஷ்கோடி பகுதியில் கடல்சீற்றம் கடுமையாகக் காணப்படுகிறது.

பல அடி தூரத்துக்கு கடல் அலை எழும்பிவருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அரிச்சல்முனை பகுதிக்குச் செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், வார இறுதி மற்றும் விஜயதசமி, சரஸ்வதி பூஜை விடுமுறை, காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ராமேஸ்வரம் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com