வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை(அக்.4) திறந்திருக்கும்!

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை(அக்.4) திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை(அக்.4) திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பராமரிப்புப் பணி காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும். 

இந்நிலையில் நாளை(செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை விடுமுறை என்பதால் பொதுமக்கள் வருகை தரும்பொருட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, வழக்கம்போல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு நாளை அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல கிண்டி சிறுவர் பூங்காவும் நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com