திருச்சி: திருச்சியில் இன்று காலை லாரி ஒன்று விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
ஓசூரில் இருந்து தக்காளி லோடு ஏற்றிய லாரி ஒன்று அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்சி- புதுக்கோட்டை சாலையில் சென்ற போது, விமான நிலையம் அருகே, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறமாக கீழ் இறங்கி, விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு, விமான நிலைய பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தினர்.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்து புலனாய்வு தெற்குப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

