14 ஆண்டுகளுக்கு பின் 71 அடியை எட்டிய வைகை அணை

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் வைகை அணை 71 அடியை எட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் வைகை அணை 71 அடியை எட்டியுள்ளது.

தேனி மாவட்டப் பகுதிகள், மூல வைகை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணையின் நீா்மட்டம்  71 அடியை எட்டியுள்ளது.

2008-ல் வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டிய நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 71 அடியை எட்டியுள்ளது. இது வரலாற்றிலேயே ஆறாவது முறையாக நிரம்பியுள்ளது.

அணையில் இருந்து 1,817 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


ஆற்றில் குளிக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப்பணித் துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com