புதுச்சேரி, காரைக்கால், நாகை, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர் துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று காற்றழுத்த தாழ்வு மணடலமாக வலுப்பெற்றது.
மேலும் வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்.24-ல் புயலாக வலுபெறக்கூடும்.
இதையும் படிக்க: மக்களை கடைக்கு வரவழைக்க படாதபாடுபடும் வியாபாரிகள்
அக்.25-ல் அதிகாலை வங்க தேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.