தீபாவளித் திருநாள்: தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

நாடு முழுவதும் நாளை தீபாவளித் திருநாள் கொண்டாட உள்ள நிலையில், தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவி்த்துள்ளார். 
தீபாவளித் திருநாள்: தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!
Updated on
1 min read


நாடு முழுவதும் நாளை தீபாவளித் திருநாள் கொண்டாட உள்ள நிலையில், தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவி்த்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சியான தீபாவளித் திருநாளில் மக்களுக்கு, குறிப்பாக தமிழக சகோதர, சகோரிகளுக்கு எனது மனமார்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.  

தீமையை நன்மை வெற்றி கொள்வதை இந்த தீபத் திருவிழா குறிப்பிடுகிறது. 

ஞானம், இரக்கம் மற்றும் நம்பிக்கையுடன் நம் இதங்களை ஒளிரச் செய்வதில் தீபாவளித் திருநாள் நமக்கு உள்ளூக்கம் அறிக்கிறது. 

இதையும் படிக்க | சூரிய கிரகணம்: ஒடிசாவில் அக்.25ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
 
ஒரே குடும்பமாக பண்டிகையை கொண்டாடி, நம் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். 

லட்சுமிதேவி நமக்கு அமைதியையும், நல்ல உடல் நலத்தையும், செழிப்பையும் தந்து அருள்புரியட்டும். 

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான. பாதுகாப்பான மற்றும் பசுமையான தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் என ஆளுநர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com