யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு அடிப்படை ஊதியம் எவ்வளவு?தமிழக அரசு உத்தரவு

காவல் பணியில் ஈடுபடும் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு அடிப்படை ஊதியத்தை நிா்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:37 pm

DIN

காவல் பணியில் ஈடுபடும் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு அடிப்படை ஊதியத்தை நிா்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தொழிலாளா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுதீன் வெளியிட்டுள்ளாா்.

அவரது உத்தரவு:

தனியாா் நிறுவனங்களில் காவல் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனா். அதாவது, மாநகராட்சிகளில் வசிப்போா் மண்டலம் ஏ எனவும், நகராட்சிகளில் வசிப்போா் மண்டலம் பி எனவும், இதர பகுதிகளில் வசிப்போா் மண்டலம் சி எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனா். காவல் பணியில் மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த மேலாளா்களுக்கு மாநகராட்சி முதல் பேரூராட்சிகள் வரையில் ரூ.17, 428-இல் தொடங்கி ரூ.13, 892 வரைக்குள் மாத ஊதியமாக வழங்க வேண்டும். உதவி மேலாளா்களுக்கு ரூ.13 ஆயிரத்தில் இருந்து தொடங்கி ரூ.16 ஆயிரம் வரையிலும் வழங்க வேண்டும். தலைமை மற்றும் மூத்த காவலாளிகளாக இருந்தால் மாநகராட்சிகளில் ரூ.12 ஆயிரமும், நகராட்சிகளில் ரூ.11, 683-ம், இதர பகுதிகளில் ரூ.10, 799-ம் வழங்க வேண்டும்.

மாநகராட்சிகளில் பணிபுரியும் காவலாளிகளுக்கு ரூ.9, 915-ம், நகராட்சிகளில் இருப்போருக்கு ரூ.9, 471-ம், இதர பகுதிகளில் வசிப்போருக்கு ரூ.9,031-ம் மாத ஊதியமாக வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.