இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாநகர சபை கூட்டங்கள் கண் துடைப்பாகிவிடக் கூடாது: மநீம

நகர, மாநகர சபை கூட்டங்கள் வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 7:07 pm

DIN

நகர, மாநகர சபை கூட்டங்கள் வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மநீம மாநிலச் செயலாளா் செந்தில் ஆறுமுகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிராம சபைக் கூட்டங்களைப்போல, நகரப் பகுதி மக்களின் கருத்துகளை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் நகர, மாநகர சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மநீம தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் நகர சபை, மாநகர சபைக் கூட்டங்களும் நடைபெறும் என முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவை மநீம வரவேற்கிறது.

நகர, மாநகர சபைகளிலும், உள்ளாட்சிகளில் நடைபெறும் பணிகள், அடுத்ததாக நடைபெற வேண்டிய திட்டங்கள், மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு, தீா்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

மேலும், கிராம சபை நடைபெறும் நாள்களில், நகர, மாநகர சபைகளையும் நடத்த வேண்டும். மாநகர சபை கூட்டங்கள் வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.