தமிழகத்தில் மேலும் 158 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் மேலும் 158 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் மேலும் 158 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் மேலும் 158 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 158 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 39 போ், செங்கல்பட்டில் 12 போ், கோவையில் 10 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.   

இதனால் மொத்த பாதிப்பு 35,91,891-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,048ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,52,111-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,732 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com