ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நடிகை குஷ்பு மீது அவதூறு: மன்னார்குடி காவல்நிலையத்தில் பாஜக மகளிரணி புகார்

குஷ்பு உள்ளிட்ட கட்சியின் பெண் நிர்வாகிகள் பற்றி அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மன்னார்குடி காவல்நிலையத்தில் பாஜக மகளிரணியினர் மனு அளித்தனர்.

News image
பாஜக பெண் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பிய திமுக பேச்சாளர் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள். 
Updated On :31 அக்டோபர் 2022, 10:14 am

DIN

குஷ்பு உள்ளிட்ட கட்சியின் பெண் நிர்வாகிகள் பற்றி அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மன்னார்குடி காவல்நிலையத்தில் பாஜக மகளிரணியினர் மனு அளித்தனர்.

திரைப்பட நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட கட்சியின் பெண் நிர்வாகிகள் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்த திமுக பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல்நிலையத்தில் பாஜக மகளிரணியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

பாஜக மாவட்ட மகளிரணித் தலைவர் ஜி.தேவி அளித்துள்ள புகார் மனுவில், திமுக பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் அக்.28 ஆம் தேதி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு மற்றும் பாஜக பெண் நிர்வாகிகள் பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி முகநூல் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதுடன் வேதனை அடையச் செய்துள்ளது. எனவே, அவதூறாகப் பேசிய சைதை சாதிக் என்பவர் மீது வழக்குப் பதிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மனுவினை காவல் உதவி ஆய்வாளர் முருகன் பெற்றுக்கொண்டார்.

அப்போது, பாஜக மாநில மகளிரணிச் செயலர் ஜீவஜோதி, மாவட்ட மகளிரணி பொதுச் செயலர்கள் அமுதா, மகேஸ்வரி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சி.எஸ்.கண்ணன், எம்.ராகவன், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் பால.பாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் ஏ.கமாலுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.