கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், “கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்” என்று தெரிவித்தனர்.
மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடையை தடுப்பதில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரித்தனர்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளின் பெயரை தெரிவிக்க இணைதளம் உருவாக்கவும், நன்கொடைக்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்.
மேலும், நன்கொடைகளுக்கு வருமான வரித்துறையின் வரி விதிப்பு சரி என அதிரடி தீர்ப்பளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


