எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே; சிலிண்டர் விற்பனை: அமைச்சர் ஐ. பெரியசாமி

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

News image
நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே; சிலிண்டர் விற்பனை: அமைச்சர் ஐ. பெரியசாமி
Updated On :2 செப்டம்பர் 2022, 10:47 am

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் மட்டும் சிலிண்டர் விற்பனையும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் பேசியதாவது, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் எரிவாயு உருளைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். 5 கிலோ மற்றும் 2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளைகள் விற்பனை விரைவில் தொடங்கும்.

மக்களின் வசதிக்காக, நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதி அறிமுகம் செய்து படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருள்களை வாங்க, நியாயவிலைக் கடைகளுக்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இல்லாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.