மின் கட்டண உயர்வு: செப்.16-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் செப்டம்பர் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் செப்டம்பர் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் செப்டம்பர் 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் நலனை முன்வைத்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட, அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com