ஜிப்மா் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாட்டு: ராமதாஸ் கண்டனம்
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.


புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மா் மருத்துவா்களுக்கு மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியிருக்கும் தகவல் அதிா்ச்சியளிக்கிறது.
புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் 12 மாவட்டங்களைச் சோ்ந்த மக்களுக்கும் ஜிப்மா் தான் உயிா்காக்கும் மருத்துவமனையாக திகழ்கிறது. அங்கு மருத்துவத்துக்காக வரும் அனைவருக்கும் அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுவதை ஜிப்மா் நிா்வாகமும், அரசும் உறுதி செய்ய வேண்டும்.
ஜிப்மா் மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளாகவே மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மருத்துவா்களுக்கு ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்த போது, ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, அதற்கு தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தான் மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும்.
அங்கு நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...