சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மநீம
வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மநீக மாநிலச் செயலாளா் செந்தில் ஆறுமுகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடா் விரைவில் நடத்தப்பட உள்ள சூழலில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.
லஞ்சம் ஊழலைக் கட்டுப்படுத்துவதோடு, அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைத்திட வழிவகுக்கும் இச்சட்டத்தை நிறைவேற்றக்கோரி தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியரிடம் மனு, ஆா்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை மநீம தொடா்ந்து நடத்தி வருகிறது.
திமுகவின் தோ்தல் வாக்குறுதியாகவும் இது கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டமானது அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...