ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தர உத்தரவு

அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பவர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 செப்டம்பர் 2022, 11:23 am

DIN

அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பவர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிதி நெருக்கடியால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், நிதி நெருக்கடியை காரணமாகக் கூறும் அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பவர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க தமிழக அரசு, போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம் அகவிலைப்படி வழங்கியது குறித்து நவம்பவர் 25ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.