குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

News image

வாடி துலுக்கனேந்தல் பகுதியில் மானாமதுரை  ஊரின் பழமையான பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:56 pm IST

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மானாமதுரை வட்டம்  வாடி அருகே துலுக்கனேந்தல் கண்மாய்க்கு கிழக்கே வயல் பகுதியில் 400 வருடத்திற்கு முற்பட்ட கல்வெட்டுடன் கூடிய திருவிடையாட்டம் என்று சொல்லக்கூடிய தானக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த  வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்  மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு இந்த கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

நாயக்கர் காலத்தில் பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்ட தான நிலத்தைக் குறிக்கும் விதமாக தமிழ் எழுத்துகள் பொறித்த கல்வெட்டாக இது உள்ளது. பொதுவாக முற்காலங்களில் மன்னர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களை கோயில்களுக்கோ தனிநபர்களுக்கோ தானம் வழங்குவது ஒரு மரபாக பின்பற்றி வந்துள்ளனர். அவ்வாறு  சைவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களை தேவதானம் என்றும் வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களை  திருவிடையாட்டம் என்றும் கூறுவார்கள்.

மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்த கல்லிலும்  திருவிடையாட்டம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல் ஒரு அடி அகலமும் 3 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இலங்கையில் ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையை மீட்க ராமர் வானர படைகளுடன் இலங்கைச் சென்ற போது இந்த வானரங்கள் மானாமதுரையில் தங்கி அதன்பின் இலங்கை சென்றதாக வரலாறு. எனவே மானாமதுரை புராண காலத்தில் வானரவீர மதுரை என அழைக்கப்பட்டு அதன் பின் பெயர் மருவி மானாமதுரை என அழைக்கப்படுகிறது.

மானாமதுரையின் பழமையான பெயரான 'வானவீரன்மதுரை' என இந்தக் கல்வெட்டில் நான்கு வரிகள் எழுதப்பட்டு உள்ளது. அதில் "வானவீரன்மதுரை அழகர் திருவிடையாட்டம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லின் நான்கு புறத்திலும் சக்கரம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு வாசகத்தின்படி மானாமதுரையின் பழமையான பெயரான வானவீரன் மதுரை என்ற பெயரே மருவி மானாமதுரை என்று மாறியுள்ளது என்பது இந்த கல்வெட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அழகர் திருவிடையாட்டம் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம்  மானாமதுரையில் உள்ள வீர அழகர் கோயிலுக்கு நிலதானம் வழங்கியதை இக்கல்வெட்டுச் செய்தி உறுதிபடுத்துகிறது. மேலும் இந்த கல்வெட்டு மூலம் இப்பகுதி நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

வாடி துலுக்கனேந்தல் பகுதியில் மானாமதுரை  ஊரின் பழமையான பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.