பொதுக் கழிப்பறைகளில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பொதுக் கழிப்பறைகளில் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபா்களின் மீது காவல் துறையில் புகாா் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.









