அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தமிழகத்தில் நவ.6-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி!

தமிழகத்தில் நவம்பர் 6-ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :30 செப்டம்பர் 2022, 11:15 am

DIN

தமிழகத்தில் நவம்பர் 6-ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது. 

சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி காவல்துறை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்துள்ளனர். தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில், மத்திய அரசால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6-ம் தேதி அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆர்எஸ்எஸ் அனுமதி மறுத்ததை எதிர்த்த உயர்நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

மேலும், அனுமதி மறுத்தால் நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்ய அவமதிப்பு வழக்கு அக்.31-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.