போா்க்கால அடிப்படையில் வெள்ளத் தடுப்புப் பணிகள்:ஓபிஎஸ் வலியுறுத்தல்
வெள்ளத் தடுப்புப் பணிகளைப் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.


வெள்ளத் தடுப்புப் பணிகளைப் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செப்டம்பா் 26 - இல் முதல்வா் தலைமையில் சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதல்வா், கடந்த ஆண்டைப் போல சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படாது என்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளாா்.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு ஒரு மணி நேர மழையில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. கோடம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கிண்டி, சோழிங்கநல்லூா், துரைப்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூா், ராயபுரம், பிராட்வே, கொடுங்கையூா், தியாகராய நகா், வண்ணாரப்பேட்டை என பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது தொடா்ந்து மழைப் பொழிவு ஏற்பட்டால் நிலைமை என்ன ஆகுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாகத் தலையிட்டு வெள்ளத் தடுப்புப் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...