சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத்தொடங்கியருக்கும் நிலையில், புதுச்சேரி கரோனா இல்லாத யூனியன் பிரதேசமாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.
புதுச்சேரியில் கரோனா நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கரோனா இல்லாத பகுதியாகவே தொடர்ந்து புதுச்சேரி உள்ளது. சுமார் 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை.
இதையும் படிக்க.. மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்
ஆனால், தமிழகத்தில் நேற்று மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. தமிழகத்தில் ஏப்ரல்-20-ஆம் தேதி 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மேலும் 39 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது.
38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக தொற்று பதிவாகியிருந்தது. அதுபோல சென்னையில் மட்டும் கரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டனர்.