தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

நம்பர் 1 முதல்வர் என்று சொல்வதைவிட, நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

நம்பர் 1 முதல்வர் என்று சொல்வதைவிட, நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
'டெக் நோ 2022' கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழாவில் முதல்வர் ஆற்றிய உரை, தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும், முதன்மை மாநிலமாக உருவாக்க சீரிய முயற்சிகளை மேற்கொண்டு, சிறப்பான திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி கொண்டு வருகின்றது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
நான் கூட பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில் ஒன்றை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவதுண்டு. சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.
இந்தியாவில் இருக்கக்கூடிய முதல்வர்களில் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள், இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள், மூன்றாவது இடத்தில்
இருக்கிறார்கள் என்று வரிசைப்படுத்தி ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தார்கள்.
அந்த கருத்துக் கணிப்பு எடுத்தபோது, 100 நாட்களிலேயே உங்களால் முதல்வராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய என்னுடைய பெயர் வந்தது. எல்லோரும் பாராட்டினார்கள். சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் உட்பட அனைவரும் என்னை பாராட்டிப் பேசினார்கள். எனக்கு இதில் ஒருபக்கம் பெருமை தான். அதை மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி நம்பர் 1 முதல்வர் என்று சொல்வதைவிட, நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும். அதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை எல்லாம் தொடர்ந்து நம்முடைய அரசு நிறைவேற்றி வருகிறது என்று உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும்.
உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவில் 27.1 விழுக்காடாக இருக்கிறது. ஆனால் தமிழகம் 51.4 விழுக்காடு பெற்று
சிறப்பான இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு இந்த புள்ளிவிபரத்தை எடுத்தால் 54 விழுக்காடாக கூட கூடியிருக்கலாம்.
உயர்கல்வியில் அனைத்து மாணவர்கள் சேர்க்கை விகிதங்களிலும் தமிழகம் முதலிடம் பெற்று முன்னிலையில் இருக்கிறது.
உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் மொத்த மாணாக்கர்கள் சேர்க்கை விகிதத்தின் அதீத வளர்ச்சிக்கும், சமூகத்தில்
ஒதுக்கப்பட்ட பிரிவு மாணாக்கர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் சான்றாக உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியதோடு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டு இருக்கிறது. நம்முடைய சாதனைக்கு சமூகநீதிக் கொள்கையும் முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.
பல்வேறு பன்னாட்டு தொழில்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் வளாகத் தேர்வுமூலம் உயர் நிலை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழக பொறியியல் மாணவர்களும் இயல்பிலேயே புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்படவேண்டும் என்ற துடிப்பும், உணர்ச்சியும் உள்ளவர்கள்.
மேலும், தற்போதுள்ள நவீன தொழிலகங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கொண்டு வரும் சவால்கள் ஆகியனவற்றை கண்டறியவும், தமிழகத்தில்
உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற பட்டதாரி மாணவர்களிடையே, தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்பு
பெறுதலுக்கான திறன்களை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் முக்கியமான புதிய திட்டம்தான் “நான் முதல்வன்” என்ற திட்டம். நீங்கள் எதை தேர்ந்தெடுத்து, அதிலே வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதிலே முதல்வனாக வரவேண்டும் என்பதற்காகத் தான் நான் முதல்வன் என்று பெயரிட்டு அந்த திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தின் மாணவ, இளைஞர்களின் அறிவுச் சக்தியை மேம்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம் ஆகும்.
அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தில் முழு மனதோடு கலந்துகொண்டு, மாணவர்களின் வளர்ச்சியினை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழகத்தில் உள்ள கல்வி மற்றும் தொழில்துறைகளின் வளர்ச்சி பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டு இருக்கிறது. தமிழகம், கல்வித் துறையில் மேலும் உயரிய நிலையை அடைவதற்கு பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு திறன்மிகு பயிற்சி அளித்து ஒரு சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில் துறையின் வெற்றி ஆகும்.
மேலும், தற்போதையசூழலில் உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் பட்டதாரி மாணவர்களை உருவாக்குவது இன்றியமையாததாக அமைந்திருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com