முதல்வரின் சீரிய நடவடிக்கையால் இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. முன்அறிவிப்பு இல்லாமல் ஏற்படும் இந்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மின்வெட்டு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டு தொடர்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் நேற்று பேரவையில் சிறப்பு கவன தீா்மானம் கொண்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 796 மின்சாரம் 2 நாள்களுக்கு முன்பாக தடைபட்டது. இருப்பினும், மாநிலத்தின் 41 இடங்களில் மட்டுமே மின் தடை ஏற்பட்டது. நிலக்கரி பற்றாக்குறையைச் சமாளிக்க 4.80 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்காக நான்கு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் முதல்வரின் சீரிய நடவடிக்கையால் இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு கல்வி நிறுவன கட்டணத்தை தனியாரும் வசூலிக்குமாறு கூறமுடியாது: உச்சநீதிமன்றம்

மின்துறை வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

சோழவந்தான் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சகோதரா் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


