புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சென்னையிலிருந்து புறப்பட்டார்.
நேற்று சென்னை வந்த அமித் ஷா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில், ஆவடியில் உள்ள சிஆா்பிஎப் முகாமில் உள்ள விருந்தினா் மாளிகை சென்று, தங்கினாா்.
அங்கிருந்து அமித்ஷா, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் ஹெலிகாப்டா் மூலமாக புதுச்சேரி புறப்பட்டார்.
புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, இன்று மாலை 5.30 மணியளவில் ஹெலிகாப்டா் மூலமாக சென்னை பழைய விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் அமித்ஷா, தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.