தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு?: காவல் துறை விசாரணை

ஜம்மு-காஷ்மீர் லாலியன் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வெடித்தது வெடிகுண்டா? என்ற நோக்கத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :24 ஏப்ரல் 2022, 4:07 am

DIN

ஜம்மு-காஷ்மீர் லாலியன் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வெடித்தது வெடிகுண்டா? என்ற நோக்கத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ள நிலையில், லாலியன் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெடிகுண்டு வெடித்தது.

தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி ஜம்மு-காஷ்மீருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) பிரதமா் நரேந்திர மோடி செல்கிறார்.  அங்கு ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா்.

மேலும், ரூ. 3,100 கோடி மதிப்பில் ஜம்மு - காஷ்மீா் பிராந்தியங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 16 கி.மீ. தொலைவு பனிஹல் - காசிகுண்ட் சுரங்கப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்க உள்ளாா்.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பிரதமர் அங்கு செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமரின் பயணத்தைத் தடுக்கும் வகையில், பாதுகாப்புப் படை வீரர்கள் செல்லும் பேருந்து மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவத்தினரின் பதிலடி மூலம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் ஜம்முவிலுள்ள லாலியன் பகுதியைச் சேர்ந்த விவசாய நிலத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மின்னல் தாக்கியதா அல்லது புதைத்து வைத்திருந்த இரும்புத் துண்டு வெடித்துச் சிதறியதா என்ற நோக்கத்தில் முதல்கட்ட விசாரணை மேற்கொண்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.