கரோனா: ஏப்.27-ல் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கரோனா அதிகரித்து வரும் நிலையில் ஏப்.27-ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். 
கரோனா: ஏப்.27-ல் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கரோனா அதிகரித்து வரும் நிலையில் ஏப்.27-ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். 

நாட்டில் தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதற்கு, புதிய ஒமைக்ரான வகை கரோனாவின் உருமாறிய வைரஸ் பரவி வருவது காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,527 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் ஏப்.27-ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். 

காணொளி மூலம் நடைபெறும் ஆலோசனையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com